APOLLOPARTHIBAN: June 2011

About Me

My photo
tirunelveli, tamilnadu, India
இதுவரை ஒன்றும் பெரிதாக சாதிக்கவில்லை.

Thursday, June 30, 2011

தங்களின் கணினியில் அனைத்து ஹார்ட்வேர் சாதனங்களும் நல்ல நிலையில் உள்ளதா?




தங்களின் கணினியில் உள்ள ஹார்ட்வேர் சாதனங்கள் அனைத்தும் நல்ல முறையில் உள்ளன என்பதை அறிவது எப்படி?

தங்களின் கணினியில் என்ன என்ன ஹார்ட்வேர் சாதனங்கள் உள்ளன, என்று தங்களுக்கு தெரியுமா? ம்ம்ம் நமக்கு தெரிந்த ஹார்ட்வேர் சாதனங்கள் ஹார்ட்டிஸ்க், மவுஸ், கீபோர்டு, மதர்போர்டு போன்ற சில சாதனங்கள் தெரியும். இன்னும் பல ஹார்ட்வேர் சாதனங்கள் உள்ளன. இவை அனைத்தும் சரியாக தான் உள்ளனவா, நல்ல முறையில் அதன் பணிகளை செய்கிறது அல்லது ஏதேனும் பிரச்சனை உள்ளனவா? என்று எப்படி அறிவது.


நண்பா! நமது மென்பொருட்களின் ஏதேனும் பிரச்சனை என்றால் அது நமக்கு உடனே தெரிய வாய்ப்பு உள்ளது..அதனை சரி செய்து கொள்ளலாம். ஆனால் அதுவே நமது ஹார்ட்வேர் சாதனங்களில் ஏதேனும் பிரச்சனை என்றால் அது நமக்கு தெரிய வாய்ப்பேயில்லை, கடைசியில் அதன் செயல்பாட்டை இழக்கும் போதே அதன் பிரச்சனை தெரியும்....ஹார்ட்வேர் சாதனங்களில் ஏதேனும் பிரச்சனை என்றால் அது அதிக செலவை வைக்கும்.. கவனம்..

இப்போ பதிவோடு மேட்டருக்கும் வருவோம்... இப்போ பிரச்சனை என்னனா? நம்ம ஹார்ட்வேர் சாதங்கள் அனைத்தும் நல்ல நிலையில் உள்ளதா என்று அறிவது தான்.? கவலை வேண்டாம் இந்த குறையை போக்க ஓர் அருமையான மென்பொருள் உள்ளது. நானே இதை பயன்படுத்தி பார்த்தேன் மிக அருமை. நண்பா!

இந்த மென்பொருள் பெயர் PCWIZARD. இதனை தங்களின் கணினியில் நிறுவியவுடன், இது தங்களின் கணினியின் ஹார்ட்வேர் சாதங்களின் நிலையை சற்று ஆழமாக ஸ்கேன் செய்து, அவையின் தற்போதய நிலை, மற்றும் அவை நல்ல இயங்கு நிலையில் உள்ளனவா என்று கூறும். இதன் சிறப்பு என்ன என்றால். இது ஒவ்வொரு சாதனமாக தனித்து ஆராய்ந்து கூறும். மேலும் ஏதேனும் சாதனத்தில் கோளாறு இருந்தால், அதை மாற்றிவிடுமாறு கூறும்... மேலும் பல சுவரிசியமான தகவல்களை தருகிறது. நண்பர்களே.. உடனே பயன்படுத்துங்கள்.

இதனை பதிவிறக்க கீழே கிளிக் செய்யவும்.
DOWNLOAD THIS SOFTWARE CLICK BELOW LINK.

தங்களின் கணினியில் அனைத்து ஹார்ட்வேர் சாதனங்களும் நல்ல நிலையில் உள்ளதா?




தங்களின் கணினியில் உள்ள ஹார்ட்வேர் சாதனங்கள் அனைத்தும் நல்ல முறையில் உள்ளன என்பதை அறிவது எப்படி?

தங்களின் கணினியில் என்ன என்ன ஹார்ட்வேர் சாதனங்கள் உள்ளன, என்று தங்களுக்கு தெரியுமா? ம்ம்ம் நமக்கு தெரிந்த ஹார்ட்வேர் சாதனங்கள் ஹார்ட்டிஸ்க், மவுஸ், கீபோர்டு, மதர்போர்டு போன்ற சில சாதனங்கள் தெரியும். இன்னும் பல ஹார்ட்வேர் சாதனங்கள் உள்ளன. இவை அனைத்தும் சரியாக தான் உள்ளனவா, நல்ல முறையில் அதன் பணிகளை செய்கிறது அல்லது ஏதேனும் பிரச்சனை உள்ளனவா? என்று எப்படி அறிவது.


நண்பா! நமது மென்பொருட்களின் ஏதேனும் பிரச்சனை என்றால் அது நமக்கு உடனே தெரிய வாய்ப்பு உள்ளது..அதனை சரி செய்து கொள்ளலாம். ஆனால் அதுவே நமது ஹார்ட்வேர் சாதனங்களில் ஏதேனும் பிரச்சனை என்றால் அது நமக்கு தெரிய வாய்ப்பேயில்லை, கடைசியில் அதன் செயல்பாட்டை இழக்கும் போதே அதன் பிரச்சனை தெரியும்....ஹார்ட்வேர் சாதனங்களில் ஏதேனும் பிரச்சனை என்றால் அது அதிக செலவை வைக்கும்.. கவனம்..

இப்போ பதிவோடு மேட்டருக்கும் வருவோம்... இப்போ பிரச்சனை என்னனா? நம்ம ஹார்ட்வேர் சாதங்கள் அனைத்தும் நல்ல நிலையில் உள்ளதா என்று அறிவது தான்.? கவலை வேண்டாம் இந்த குறையை போக்க ஓர் அருமையான மென்பொருள் உள்ளது. நானே இதை பயன்படுத்தி பார்த்தேன் மிக அருமை. நண்பா!

இந்த மென்பொருள் பெயர் PCWIZARD. இதனை தங்களின் கணினியில் நிறுவியவுடன், இது தங்களின் கணினியின் ஹார்ட்வேர் சாதங்களின் நிலையை சற்று ஆழமாக ஸ்கேன் செய்து, அவையின் தற்போதய நிலை, மற்றும் அவை நல்ல இயங்கு நிலையில் உள்ளனவா என்று கூறும். இதன் சிறப்பு என்ன என்றால். இது ஒவ்வொரு சாதனமாக தனித்து ஆராய்ந்து கூறும். மேலும் ஏதேனும் சாதனத்தில் கோளாறு இருந்தால், அதை மாற்றிவிடுமாறு கூறும்... மேலும் பல சுவரிசியமான தகவல்களை தருகிறது. நண்பர்களே.. உடனே பயன்படுத்துங்கள்.

இதனை பதிவிறக்க கீழே கிளிக் செய்யவும்.
DOWNLOAD THIS SOFTWARE CLICK BELOW LINK.

எடையை குறைக்கும் தயிர், எடையை கூட்டும் உருளைக்கிழங்கு ?


தானியங்கள், பழங்கள், சாலட்கள் உண்பவர்களை விட, "பாஸ்ட் புட்' வகைகள், பொறித்த உணவு,
இறைச்சி வகைகளை உண்போர், சற்று பருமனாக இருப்பர் என்பது தெரியும். இங்கிலாந்தில் உள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகம், பருமனாக இருப்பவர்களிடம் ஆய்வு ஒன்றை நடத்தியது. இதன் முடிவில் சில அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. கொட்டை வகைகளால் ஏற்படும் நன்மைகளை, அவித்த உருளைக் கிழங்கு கெடுக்கிறது என்றும், தயிரை தினமும் உண்டால் உடம்பை மெலிதாக வைத்துக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.


ஆய்வு: இப்பல்கலைக்கழகம், 20 ஆண்டிற்கும் மேலாக, 30 முதல் 50 வயதிற்குட்பட்ட ஒரு லட்சத்திற்கும் அதிகமான ஆண், பெண்களிடம் இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டது. அவர்களது உடற்பயிற்சி, உணவு, தூக்கம் ஆகியவையும் ஆய்வில் கவனத்தில் கொள்ளப்பட்டன.



குறைவான உணவு, அதிக உடற்பயிற்சி: உடலில் கலோரி வெளியேறுவது மற்றும் வெளியிலிருந்து கலோரி உள்ளே வருவதை பொறுத்து உடலில் வளர்ச்சி மாற்றம் ஏற்படும். "குறைவான உணவு; அதிகமான உடற்பயிற்சி' என்பதை தாரக மந்திரமாக கொள்ள வேண்டும். கலோரி, உடலுக்கு முக்கியமான ஒன்று. சில உணவுகளில் அதிக அளவு கலோரி உள்ளது. அவற்றை உண்ணும்போது, உடலில் நடக்கும் வேதியல் மாற்றத்தை பொறுத்து சிலர் பருமனாகின்றனர். ""மிதமான உணவுகளை உண்ண வேண்டும். இது கலோரியின் அளவை குறைக்கும். நாம் உண்ணும் உணவில் எவ்வளவு கலோரி உள்ளது என்பதை அறியாமல் உண்பதே பருமனுக்கு காரணம்,'' என பல்கலைக்கழக ஆய்வாளர் டரியூஸ் தெரிவித்தார்.

இன்சுலினை இம்சிக்கும் உருளை: பொதுவாக, காய்கறிகள் தொடர்பான ஆய்வுகளில், உருளைக்கிழங்கு ஒத்தி இருந்தது. அன்றாடம் உணவில், உருளைக்கிழங்கை சேர்ப்பவர்கள், நான்கு ஆண்டுகளில் குறிப்பிட்ட அளவு பருமனை அடைகின்றனர். எண்ணெய்யில் பொறித்த உருளைகிழங்கு கொழுப்பை அதிகரிக்கும் என்பது ஏற்கனவே தெரிந்தது. ஆனால், அவித்த மற்றும் கூழ்ம நிலையில் உள்ள உருளைக்கிழங்கு, உடலை குண்டாக்குவதாகவும், இதற்கு காரணம் இன்சுலின் ஹார்மோனை உருளை பாதிப்பது தான் எனவும் கண்டுபிடித்துள்ளனர்.



எடையை குறைக்கும் தயிர்: தினமும் உணவில் பழங்கள், காய்கறிகள், கொட்டை வகைகளை உண்பவர்களின் உடல் எடை, காலாண்டில் அரை பவுண்ட் (0.22 கிலோ) குறையும். தவிர, உணவில் தயிர் சேர்த்துக் கொள்பவர்களின் உடல் எடை, நான்கு ஆண்டுகளில் 1 பவுண்ட் வரை குறைகிறது என்ற ஆச்சர்ய தகவலும் ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆகவே உடல் எடையை குறைக்க வேண்டும் என நினைப்பவர்கள் எண்ணெய் பலகாரங்கள், உருளைகிழங்கு போன்றவற்றை தவிர்த்து, கலோரி குறைவாக உள்ள உணவுப் பொருட்களை உண்ணுங்கள். பலன் பெறுங்கள்.

கூகிளுடன் இந்திய அரசு மோதல்

கூகிள் இணையத் தேடல் வலைத்தளம், கோடிக்கணக்கானோருக்கு தகவல்களை வழங்கும் முக்கியத் தளமாக உள்ள நிலையில், இந்தியாவில் பல முக்கியப் பிரமுகர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் தலைவலியாகவும் இருக்கிறது. இந்தியாவில் மட்டும் கடந்த ஆண்டு கடைசி 6 மாதங்களில், இணையத் தேடல் வலைத் தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள தகவல்களை அல்லது படங்கள் உள்பட 282 அம்சங்களை நீக்குமாறு கோரி 67 கோரிக்கைகள் வந்ததாக கூகிள் தெரிவித்துள்ளது.


அவற்றில் 6 கோரிக்கைகள் நீதிமன்றங்களில் இருந்தும், மீதமுள்ளவை நிர்வாகம், காவல் துறை உள்ளிட்டவர்களிடமிருந்தும் வந்துள்ளது. அதில் 22 சதம் கோரிக்கைககள் முழுமையாகவோ அல்லது பாதியளவோ ஏற்கப்பட்டு, தகவல்கள் நீக்கப்பட்ட நிலையில், மற்ற கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டதாக கூகிள் கூறியுள்ளது.
பல்வேறு மாநில முதலமைச்சர்கள் மற்றும் மாநிலத்தின் மூத்த அதிகாரிகள் குறி்த்து கடுமையாக விமர்சனத்துடன் வெளியாகியுள்ள யூ டியூப் வீடியோ மற்றும் வலைபூக்களை (blogs) நீக்குமாறு வந்த கோரிக்கைகளை நிராகரித்துவிட்டதாக கூகுள் தெரிவித்துள்ளது.

தகவல்களை கேட்கிறது இந்திய அரசு
கூகிள் இணையத் தேடல் வலைத்தளத்தில் இதுபோன்ற தகவல்களை உபயோகிப்போர் பற்றிய விவரங்களுக்காக அரசிடமிருந்து 1699 கோரிக்கைகள் வந்ததாகவும், அவற்றில் 79 கோரிக்கைகள் ஏற்கப்பட்டதாகவும் கூகுள் கூறியுள்ளது. அந்த நபர்கள் எப்படிப்பட்ட தகவல்களைத் தேடுகிறார்கள் என்ற விவரங்களைப் பெறுவதற்காக இந்தக் கோரி்க்கைகள் வைக்கப்பட்டன.
ஆனால், அந்த நபர்களைப் பற்றிய விவரங்களைத் தரவில்லை என கூகிள் கூறியுள்ளது. இந்தியாவில் இருந்து, விவரங்களை நீக்குமாறு வந்த 50 கோரிக்கைகளில், 15 கோரிக்கைகள் அவதூறு தொடர்பானவை. 16 கோரிக்கைகள் தேசிய பாதுகாப்பு தொடர்பானவை. ஆள் மாறாட்டம், ஆபாசப்படம் உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பாகவும் கோரிக்கைகள் வந்துள்ளதாக கூகிள் தெரிவித்துள்ளது.
இந்தியாவைப் பொருத்தவரை, தகவல்கள் அல்லது வீடியோக்களை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை 123 சதம் அதிகரித்துள்ளதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதேபோல், பல்வேறு நாடுகளில் இருந்தும் கூகிள் நிறுவனத்துக்கு கோரிக்கைகள் வந்துகொண்டிருக்கின்றன.
ஏற்ததாழ எல்லா நாடுகளில் இருந்தும், கோரிக்கைகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளதாக கூகிள் வெளியிட்டுள்ள விவரங்கள் தெரிவிக்கின்றன.

குரோம் உலாவியில் பிளாஷ் விளம்பரங்களை தடுக்க புதிய வழி


கூகிள் குரோம் உலாவியில் பிளாஷ் விளம்பரங்கள் சில நேரங்களில் நமக்கு சலிப்பையும் வெறுப்பையும் ஏற்படுத்தும் வண்ணம் இருக்கும் இது போன்ற பிளாஷ் விளம்பரங்களை கட்டுபடுத்த குரோம்-ல் புதிதாக வந்திருக்கும் நீட்சி உதவுகிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

மிகப்பெரிய இணையதளத்திற்கு சென்றால் கூட நம்மை விடாமல் தொடரும் ஒன்று தான் பிளாஷ் விளம்பரங்கள், எதற்காக பிளாஷ் விளம்பரங்கள் அதிகமாக பயன்படுத்துகின்றனர் என்றால் விரும்பும் வகையில் அனிமேசன் உருவாக்கி அதை சிறிய அளவிலான கோப்பாக மாற்றி விளம்பரதாரர்கள் மக்களை ஈர்க்கின்றனர் பல நேரங்களில் ஒரு சில தளங்களில் தேவையில்லாத பிளாஷ் விளம்பரங்கள் நமக்கு வெறுப்பை உண்டு பண்ணுகிறது , இனி இது போன்ற பிளாஷ் தொல்லைகளை நீக்குவதற்காக குரோம் உலாவியில் ஒரு நீட்சி உள்ளது.

முகவரி :https://chrome.google.com/webstore/detail/gofhjkjmkpinhpoiabjplobcaignabnl?hl=en

குரோம் உலாவியில் மேலே கொடுத்திருக்கும் தளத்திற்கு சென்று Install என்ற பொத்தானை சொடுக்கி இந்த நீட்சியை நிறுவிக்கொள்ளவும் அடுத்து படம் 1-ல் காட்டியபடி Flash ஐகானை சொடுக்கி Block Flash on this Site என்பதை சொடுக்கி
பிளாஷ் விளம்பரங்கள் ஏதும் இல்லாமல் பார்க்கலாம். Option என்பதை சொடுக்கி ஏற்கனவே நாம் பிளாஷ் கோப்புகள் பார்க்க வேண்டாம் என்று Block செய்த தளங்களை நமக்கு வேண்டும் போது Unblock செய்யும் ஆப்சனும் இருக்கிறது. பிளாஷ் விளம்பரங்களின் தொந்தரவை நீக்க விரும்பும் அனைவருக்கும் இணையதளத்தை வேகமாக பார்க்க நினைப்பவர்களுக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

6 மணி நேரத்துக்கு மேல் உட்கார்ந்த இடத்திலேயே வேலை செய்யும் பெண்களின் ஆயுள் குறைய வாய்ப்பு ?


தினசரி 6 மணி நேரத்துக்கு மேல் உட்கார்ந்த இடத்திலேயே வேலை செய்யும் பெண்களின் ஆயுள்
குறைய வாய்ப்புள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
நவீன தொழில்நுட்ப வளர்ச்சியால் மனிதர்களின் பெரும்பான்மையான வேலைகள் உட்கார்ந்த இடத்திலே செய்யும் அளவிற்கு முடங்கிவிட்டது. இவ்வாறாக வேலை செய்பவர்கள் எண்ணிக்கை உலக அளவில் பெருகி வருகிறது.



இது குறித்து, 1.23 லட்சம் பேரை கடந்த 14 ஆண்டுகளாக அமெரிக்கன் கேன்சர் சொசைட்டி விஞ் ஞானிகள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். அவர்களின் உடல் ஆரோக்கிய நிலைகளையும் கண்காணித்தனர். அதில், உட்கார்ந்த நிலையில் தொடர்ந்து 6 மணி நேரத்துக்கு மேல் வேலை செய்பவர்கள் மற்றும் எந்தவொரு உடற்பயிற்சியும் செய்யாதவர்களுக்கு இதய நோய், நீரிழிவு, நரம்பு தளர்ச்சி, உடல் பருமன் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

அவ்வாறாக தினசரி 3 மணி நேரம் உட்கார்ந்து இருக்கும் பெண்களைவிட, 6 மணி நேரத்துக்கு மேல் உட்காந்து இருக்கும் 40 சதவீதம் பெண்களின் ஆயுள் குறைய வாய்ப்புள்ளது. அதில் ஆண்களுக்கு 20 சதவீதம் வாய்ப்புள்ளது. உட்கார்ந்த இடத்திலேயே வேலை செய்வதால் இளம் வயதில் இறப்பதற்கான சூழல்கூட ஏற்படலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Wednesday, June 29, 2011

பிடிஎப் கோப்பை வேர்ட் கோப்பாக மாற்ற ?


பிடிஎப் கோப்புக்களில் ஏதேனும் மாற்றங்கள் செய்ய வேண்டுமெனில் அதனை வேர்ட் கோப்பாக மாற்றி பின்பு தான் மாற்றங்கள் செய்ய வேண்டும்.
பிடிஎப் கோப்பை வேர்ட் கோப்பாக மாற்ற இணையத்தில் பல்வேறு இலவச மென்பொருள் கிடைக்கின்றன. இவ்வாறு கிடைக்கும் மென்பொருள்களில் பலவும் சரியாக வேலை செய்வது இல்லை.

முறையாக பிடிஎப் கோப்பை வேர்ட் கோப்பாக மாற்றம் செய்வது கிடையாது. ஒரு சில குறைபாடுகள் இருக்கதான் செய்கின்றன. எந்த வித குறைபாடும் இல்லாமல் மாற்றம் செய்ய Able2Doc என்ற மென்பொருள் உதவி செய்கிறது.
தற்போது Able2Doc என்ற மென்பொருளை லைசன்ஸ் கீயுடன் இலவசமாக தருகின்றனர். இந்த மென்பொருளை தரவிறக்க முகநூலில் கணக்கு இருக்க வேண்டும்.
சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று முகநூலின் பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட்டு உள்நுழையவும். பின் Like என்னும் பொத்தானை அழுத்தவும். பின் உங்களுக்கென ஒரு இரகசிய கோடினை பெறுவீர்கள் அதனை குறித்து வைத்துக் கொள்ளவும்.
பின் Able2Doc PDF to Word Giveaway என்னும் சுட்டியை அழுத்தவும். அடுத்ததாக தோன்றும் விண்டோவில் இரகசிய எண்னை உள்ளிட்டு மென்பொருளை தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
பின் மென்பொருளை கணணியில் நிறுவிக் கொள்ளவும். பின் Able2Doc அப்ளிகேஷனை ஒப்பன் செயது. குறிப்பிட்ட பிடிஎப் கோப்பை ஒப்பன் செய்யவும். இந்த அப்ளிகேஷன் மூலம் ஆங்கில எழுத்துருக்களை உடைய பிடிஎப் கோப்புக்கள் மட்டுமே வேர்ட் கோப்புக்களாக மாற்ற முடியும்.
பிடிஎப் டாக்குமெண்டை ஒப்பன் செய்து Select என்னும் தேர்வினை அழுத்தி All மற்றும் Area என்னும் செலக்ட் தேர்வுகளை அழுத்தி பிடிஎப் கோப்பை தேர்வு செய்யவும். நீங்கள் எவ்வற்றையெல்லாம் தேர்வு செய்கிறீர்களோ அவைகள் மட்டுமே மாற்றம் ஆகும்.
பின் Convert என்னும் தேர்வினை அழுத்தி வேர்ட் மற்றும் ஒப்பன் ஆப்பிஸ் கோப்பு போர்மட்களில் மாற்றம் செய்து டாக்குமெண்ட்களை சேமித்துக் கொள்ள முடியும். பின் Convert to word என்னும் தேர்வில் Standard(Recommended) என்பதை அழுத்தவும்.
அடுத்ததாக தோன்றும் விண்டோவில் Continue என்னும் பொத்தானை அழுத்தவும். மாற்றம் செய்த கோப்பை சேமிக்க வேண்டிய இடத்தை குறிப்பிட்டு கோப்பின் பெயரையும் குறிப்பிடவும்.
தற்போது நீங்கள் குறிப்பிட்ட இடத்தில் நீங்கள் குறிப்பிட்ட கோப்பு போர்மட்டில் டாக்குமெண்ட் மாற்றம் செய்யப்பட்டு இருக்கும்.

Kaspersky internet security 2011



Download :
Click here to download


Crack : (3700 days)
Click here to download


Check this site for latest keys :
click here


முகம் பொலிவின்றி உலர்ந்த சருமமா?

முகம் பொலிவின்றி உலர்ந்த சருமமா?


ஒரு ஸ்பூன் வெள்ளரிக்காய் ஜூஸ், 2 ஸ்பூன் தயிர், இரண்டு ஸ்பூன் சாதம் வடித்த கஞ்சிஅல்லது இரண்டு ஸ்பூன் உருளை கிழங்கு ஜூஸ் இவைகளை நன்கு அடித்துக் கலக்கவும், பிறகு பஞ்சில் நனைத்து முகத்தில் தடவவும், அதன் பிறகு இரண்டு கண்களையும் மூடிக்கொண்டு அதன்மேல் இந்த கலவையை நனைத்த பஞ்சை வைக்கவும். 15min கழித்து முகத்தை wash செய்தால் முகம் அப்படியே பளபளக்கும்.

தவறுதலாக அழித்து விட்டீர்களா ? (கவலை வேண்டாம்)



ஹாட் டிஸ்கில் அல்லது யு.எஸ்.பியில், செல்போன் மெமரி கார்டில் சேமித்து வைத்திருந்த முக்கியமான
ஒரு பைலை தவறுதலாக அழித்து விட்டீர்களா?கவலை வேண்டாம். அழித்த பைல்களை மீட்டுக் கொள்ளலாம்.

அது எப்படி சாத்தியம்? இதற்காக இரண்டு மென்பொருட்களை கீழே தருகிறேன். ஒன்று டிஸ்க் டிக்கர்(Disk Digger) இன்னொன்று ரெகுவா(Recuva) . இவை இரண்டினுடைய தொழிற்பாட்டையும் பார்ப்போம்.


1.டிஸ்க் டிக்கர் (Disk Digger)கம்ப்யூட்டரின் ஹார்ட் டிஸ்க் மட்டுமின்றி பிளாஷ் டிரைவ், செல்போன் மெமரி, டிஜிட்டல் கேமரா மெமரி மற்றும் பிற மெமரி மீடியாக்களில் அழித்த பைல்களையும் மீட்டுத் தரும் என்பது இதன் சிறப்பு.மீண்டும் பார்மட் செய்யப்பட்ட அல்லது சரியாக பார்மட் செய்யப்படாத டிஸ்க்குகளில் இருந்தும் பைல்களை மீட்டுத் தரும் என்பது கூடுதல் சிறப்பு. Disk Digger ஒரு இலவச புரோகிராம்.

டிஸ்க் டிக்கர் (Disk Digger) தரவிறக்கம் செய்ய : Download கிளிக் செய்யவும்.

2.ரெகுவா(Recuva)இந்த புரோகிராம் பயன்படுத்த எளிதானது. இது உங்களுக்கு அழிந்த பைல் குறித்து என்ன மாதிரி உதவி தேவை என இந்த புரோகிராமே கேட்டு வழி நடத்துகிறது. எடுத்துக் காட்டாக ரீசைக்கிள் பின்னிலிருந்தும் அழித்த பைல்கள் எனக்கு மீண்டும் வேண்டும் எனத் தந்த போது ஆச்சரியப்படத் தக்க வகையில் அனைத்து பைல்களும் திரும்பக் கிடைத்தன. இழந்த பைல்களை மீட்பதில் இந்த புரோகிராம் அனைத்து வகை உதவிகளையும் தருகிறது என்பதில் சந்தேகமில்லை.




புத்தம் புதிய தமிழ் யுனிகோட் எழுதி மற்றும் கன்வெர்ட்டர்


கணினியில் தமிழ் எழுத நாம் பல்வேறு முறைகளை பயன்படுத்துகிறோம். பிளாக், எடிட்டர், Google tamil Input, NHM எழுதி, பாமினி எழுத்துரு போன்ற பல்வேறு முறைகளை பயன்படுத்தி தமிழில் எழுதி கொண்டிருக்கிறோம். இந்த முறையில் இன்னும் ஒரு புதிய தமிழ் UNICODE எழுதி அறிமுகப் படுதப்பட்டுள்ளது. இந்த எழுதியில் உள்ள சிறப்பம்சம் கன்வெர்டரும் இதில் உள்ளது உள்ளது. அதாவது பாமினி, அமுதம் போன்ற எழுத்துருக்களில் எழுதி அதை யுனிகோடாக மாற்றி கொள்ளும் வசதி இதில் உள்ளது.
  • இந்த வசதியை குரோம் உலவி பயன்படுத்துபவர்கள் பெறலாம்.
  • தமிழ் யுனிகோட் எழுதி எக்ஸ்டென்சன் மூலம் Roman, பாமினி, தமிழ்நெட்99, அமுதம் ஆகிய விசைப்பலகை அமைப்புகளிலும் தட்டச்சு செய்யும் வசதி உள்ளது.
  • இணைய இணைப்பு இல்லாத நிலையிலும் இந்த நீட்சியை பயன்படுத்த முடியும்.
  • இனி இந்த முறையிலும் தமிழில் டைப் செய்து நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

உதாரணமாக thaminglish தெரிவுசெய்து vaNakkam என தட்டச்சு செய்தால் "வணக்கம்" என இரண்டாம் பெட்டியுனுள் பெறமுடியும். அதேபோல் ஏணைய விசைப்பலகை அமைப்புகளில் ( பாமினி, அமுதம், தமிழ்நெட்99 ) தட்டச்சு செய்து பெற முடியும்.

இந்த நீட்சியை குரோமில் இணைக்க - Tamil Unicode Writter

லேப்டாப் பேட்டரி doubler software


லேப்டாப் ல battery தீர்ந்து போச்சா கவலையே படாதிங்க ..நீங்க வெளியூர் போறப்போவோ இல்ல முக்கியமா உங்க லேப்டாப் ல எதாவது செஞ்சு கிட்டு இருக்கும் போது battery காலி ஆனா டென்ஷன் ஆவாதிங்க laptop battery doubler software என்னும் மென்பொருள் மூலமா laptop battery time அதிகரிக்கும் .இதில் உள்ள முக்கிய அம்சங்கள் என்னன்னா? battery யின்
திறனை இரட்டை மடங்காக்கும் battery recharge time அதிகரிக்கும் பயன்படுத்துவதற்கு

எளிதானது

Tuesday, June 28, 2011

ரீலிஸ் ஆகாமலே அழ வைத்த படம் ?

களவாடிய பொழுதுகள் படத்தை முடித்து ஆண்டுகள் பல ஆகியும் ரிலீஸ் செய்யாமல் இருப்பதை நினைத்து,
நினைத்து தினமும் வருந்திக்கொண்டு இருக்கிறார் டைரக்டர் தங்கர் பச்சான். அழகி, சொல்ல மறந்த கதை, தென்றல், பள்ளிக்கூடம் என்று இதுவரை மண் சார்ந்த, மக்கள் சார்ந்த படமாக எடுத்த டைரக்டர் தங்கர் பச்சான், மீண்டும் ஒரு உணர்வுபூர்வமாக ஒரு கதையை எழுதி, இயக்கி இருக்கும் படம் தான் "களவாடிய பொழுதுகள்". பிரபுதேவா, பூமிகா ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் இந்தபடம் முடிந்து ஆண்டுகள் பலஆகியும், ரிலீஸ் செய்ய முடியாமல், பெட்டியில் தூங்கி கொண்டு இருக்கிறது.



ஐங்கரன் பிலிம்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. ஐங்கரன் பிலிம்ஸ் தயாரித்த சமீபத்திய படங்கள் எல்லாம் தொடர் தோல்வியை சந்தித்தன. "அங்காடித்தெரு" படம் ஓரளவுக்கு நிலைமையை சரி செய்து கொடுத்தாலும், ஐங்கரனால், இப்படத்தை ரிலீஸ் செய்ய முடியவில்லை. படத்தின் தயாரிப்பாளர் கருணாமூர்த்தி வெளிநாட்டிற்கு சென்றுவிட்டார். மற்றொருவர் அருண்பாண்டியனும் அரசியல் அப்படி, இப்படி என்று சொந்த வேலைகளில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார். ஆனால் படத்தை இயக்கிய தங்கர் பச்சனோ என்ன செய்வது என்று புரியாமல் தவித்து வருகிறார். மேலும் தன்னுடைய அடுத்த படவேலைகளிலும் கவனம் செலுத்த முடியாமல் இருக்கிறார்.


இதுகுறித்து தங்கர் கூறியதாவது, ஒரு படத்தை முடித்துவிட்டு, பல வருடங்களாக அந்த படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் படைப்பாளி காத்திருப்பது மிக கொடுமையான விஷயம். என்னுடைய முந்தயை படங்களை எல்லாம் 90நாட்களில் கூட முடித்து ரிலீஸ் செய்திருக்கிறேன். ஆனால் களவாடிய பொழுதுகளை முடித்து ஆண்டுகள் பல ஆகியும், இவ்வளவு காலம் காத்திருப்பது வருந்தத்தக்கது. என்னால் எந்த வேலையிலும் கவனம் செலுத்த முடியவில்லை. எப்பொழுதும் மனதில் "களவாடிய பொழுதுகள்" படத்தை பற்றிய சிந்தனை தான் ஓடிக்கொண்டு இருக்கிறது. என் நிலைமை யாருக்கு வரக்கூடாது. தமிழ் சினிமா எந்த அளவிற்கு வளர்ச்சி அடைந்துள்ளதோ, அதே அளவுக்கு பிரச்சனைகளும் அதிகரித்து இருக்கிறது. இதுவரை பிரபுதேவாவை ஒரு நடன இயக்குநராக, டைரக்டராக தான் எல்லாருக்கும் தெரியும். ஆனால் இந்தபடத்தின் மூலம் அவரை ஒரு அருமையான நடிகராக பார்க்க முடியும். "களவாடிய பொழுதுகள்" மனித உறவுகளை, உணர்வுகளை பேசும் என்றும், அந்த நாளுக்காக நான் காத்திருப்பதாகவும் வருத்தத்துடன் கூறினார்.

ஆண் குரலை பெண் குரலாகவும் , பெண் குரலை ஆண் குரலாகவும் மாற்றும் இலவச மென்பொருள்.

ஒரு ஆண் பேசும் குரலை நேரடியாக ஒரு பெண் பேசும் குரல் போல் மாற்ற உதவும் இலவச மென்பொருளைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

ஆண்கள் பேசும் குரலும் பெண்கள் பேசும் குரலும் தனியாக தெரியும் ஆனால் மொபைல் போன்களில் ஆண்கள் பேசும் குரலை அப்படியே பெண்கள் பேசுவது போல் மாற்ற ஏற்கனவே பல மென்பொருட்கள் உள்ளன, ஆனால் கணினியில் ஆண்கள் பேசும் குரலை அப்படியே நேரடியாக பெண்கள் பேசுவது போல் மாற்ற ஒரு மென்பொருள் உள்ளது.

தறவிரக்க முகவரி :http://www.screamingbee.com/product/MorphVOXJunior.aspx

மேலே கொடுத்திருக்கும் முகவரியை சொடுக்கி இந்த மென்பொருளை இலவசமாக தறவிரக்கி நம் கணினியில் நிறுவலாம். மென்பொருளை இயக்கி யாருடைய குரலில் கேட்க வேண்டுமோ அதை தேர்ந்தெடுத்து நாம் பேசினால் போதும், உதாரணமாக ஒரு ஆண் பேசும் போது பெண் குரலை தேர்ந்தெடுத்துவிட்டு பேச ஆரம்பித்தால் அது பெண் பேசுவது போல் இருக்கும். Man , Tiny Folks , Woman என்ற மூன்று விதமான ஆப்சன் இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் இதில் Tiny Folks என்பது கார்டூன் கேரக்டர் பேசுவது போல் இருக்கும். பல சமயங்களில் சாட்டிங்கில் பேசுவது பெண் தான் என்று நினைத்திருப்போம் உண்மையிலே அவர் இது போன்று இருக்கும் மென்பொருளை பயன்படுத்தி தான் பேசிக்கொண்டிருப்பார். வேடிக்கைக்காக ஆண் குரலை பெண் குரலாகவும் பெண் குரலை ஆண் குரலாகவும் மாற்ற விரும்பும் அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

Monday, June 27, 2011

கோழி முட்டைகளை அடைகாத்து குஞ்சு பொரிக்கும் புறாக்கள்!

ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை தெற்கு தெருவைச் சேர்ந்தவர் இப்ராகிம் (46) இவர் தனது வீட்டின் மாடியில் ஏராளமான புறாக்களை வளர்க்கிறார். கடந்த ஆண்டு இவரது மகன் சிறுவன் அப்துல் ரஹ்மான் ஒரு கோழி முட்டையை, புறாக்களின் முட்டைகளுடன் சேர்த்து வைத்தான். அந்த முட்டையை ஒரு புறா அடைகாத்து குஞ்சு பொறித்தது. அந்த கோழிக்குஞ்சை புறா கண்ணும், கருத்துமாக பார்த்துக்கொண்டது. குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு அந்த கோழிக்குஞ்சு தனியாக பிரித்து வளர்க்கப்படுகிறது. இதையடுத்து புறாக்களின் முட்டைகளுடன், கோழி முட்டைகளை வைத்து குஞ்சு பொறிக்கும் வித்தியாசமான நடைமுறை அந்த வீட்டில் தொடர்கிறது. தற்போது 2 புறாக்கள் இதுபோல் கோழி குஞ்சுகளை பொறித்து பாதுகாக்கின்றன.இப்ராகிம் கூறுகையில், “வீட்டு மாடியில் நூற்றுக்கணக்கான புறாக்களை வளர்க்கிறேன். கோழி முட்டையை புறா அடைகாப்பது வித்தியாசமாக இருந்தாலும், அதுவே எங்களது வீட்டில் நடைமுறையாக மாறிவிட்டது. அக்கம், பக்கத்தில் வசிப்பவர்களும் கோழி முட்டைகளை புறா மூலம் குஞ்சு பொறிப்பதற்கு தருகின்றனர். இதில் அவர்களுக்கும் ஒரு மகிழ்ச்சி’’ என்றார்

CONTACT FORM

Name:
Email:
Comment:
 
Twitter Bird Gadget